ஐ.எஸ் போராளிகளால் 48 மணி நேர காலப்பகுதியில் குறைந்தது 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேற்படி போராளிகளால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
'முஜாஹித்தின் செய்தி' என்ற தலைப்பில் இந்த மரணதண்டனை நிறைவேற்றங்களை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.தன்னினச் சேர்க்கையில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரு ஆண்களுக்கு உயரமான கட்டடமொன்றின் கூரையிலிருந்து கீழே தள்ளி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தன்னினச் சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதற்காக மத சட்டத்தின் கீழ் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக முகமூடியணிந்த போராளியொருவர் அறிவிப்பு செய்ததை தொடர்ந்தே தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு உலோக சிலுவையில் கட்டி வைக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.அவர்கள் இருவரும் டிரக் வண்டிகளில் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
சாதாரண உடையில் காணப்பட்ட அவர்களுக்கு பின்னால் நின்ற இரு ஐ.எஸ்.போராளிகள் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கின்றனர்.இந்த மரணதண்டனை நிறைவேற்றத்தை பார்க்க கூடியிருந்த அனைவரும் ஆண்களாவர். மேற்படி மரணதண்டனைகள் ஈராக்கிய மொசூல் பிராந்தியத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேசமயம் ஈராக்கிய நினெவெஹ் பிராந்தியத்தில் தகாத காதல் தொடர்பை பேணிய பெண்ணொருவருக்கு போராளிகள் கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளனர்.அந்த பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பின் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment