சூப்பர் சிங்கர்' ஜெசிக்­கா­வுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!


'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்­சியில் பரி­சாக வென்ற ஒரு கிலோ தங்­கத்தை தானம் செய்த இலங்கைத் தமிழ் மாணவி ஜெசிக்­கா­வுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரி­வித்துள்ளார்.
தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்­கத்தை அந்த மேடை­யி­லேயே தமி­ழகம் மற்றும் இலங்­கையில் தமிழர் பகு­தி­களில் ஆத­ர­வின்றித் தவிக்கும் குழந்­தைகள் நல­னுக்­காக வழங்­கு­வ­தாக ஜெசிக்கா அறி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் ஜெசிக்­கா­வுக்கு நடிகர் சூர்­யா­விடம் இருந்து நேரில் சந்­திக்க வரு­மாறு அழைப்பு வந்­துள்­ளது. இதை­ய­டுத்து நடிகர் சூர்­யாவை சந்­திக்க சென்ற ஜெசிக்­காவைஇ போட்­டியில் வெற்றி பெற்­ற­தற்­காக வாழ்த்து தெரி­வித்­துள்ளார். நடிகை ஜோதிகா கொடுத்­த­னுப்­பிய சிறப்பு பரி­சையும் ஜெசிக்­கா­வுக்கு இந்த சந்­திப்­பின்­போது சூர்யா வழங்கி பாராட்­டி­யுள்ளார்.
நடிகர் சூர்­யாவை சந்­தித்­தது தனது வாழ்­நாளில் மறக்க முடி­யாத நிகழ்வு என்று ஜெசிக்கா தெரி­வித்­துள்ளார். நடிகர் சூர்­யாவும் தனது அகரம் அறக்­கட்­டளை மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment