பிரித்தானியாவின் 56 ஆவது பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்கான முக்கியத்துவமிக்க பொதுத் தேர்தல் இன்று ஆரம்பமாகிறது.
தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு கட்சிகளாக அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமெரோனின் பழைமைவாதக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவரான எட் மிலிபான்டின் தொழில் கட்சியும் விளங்குகின்றன.
இந்த இரு கட்சிகளும் 1922 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் மிகப் பெரிய கட்சிகளாக விளங்கி அந்நாட்டுக் கான பிரதமர்களை வழங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரே அடுத்த பிரதமராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. மேற்படி தேர்தலையொட்டி பிரித்தானிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் சாத்தியமில்லை என கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விடவும் பலமடைந்துள்ளதாகவும் ஆயினும் மேலும் செயலாற்ற வேண்டியுள்ளதாகவும் பிரதமர் டேவிட் கமெரோன் தெரிவித்துள்ளார். பழைமைவாத கட்சிக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்.
அதேசமயம் எட் மிலிபான்ட், எமது நாட்டுக்கு கடின உழைப்பின் வெகுமதியை மீளப் பெற்றுத் தருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் டேவிட் கமெரோனின் பழைமைவாத கட்சி 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் 307 பாராளுமன்ற ஆசனங்களை வென்றெடத்துள்ளார்.
“2010 ஆம் ஆண்டிலிருந்து நாம் பலவற்றை அடைந்துள்ளோம். எனினும் கல்வி உள்ளடங்கலான விடயங்களில் தற்போது அடையப் பெற்றவைகள் திருப்பதிகரமானவையாக இல்லை" என தெரிவித்துள்ள டேவிட் கமெரோன்இ நலன்புரி மற்றும் பாடசாலை சீர்திருத்த விவகாரங்கள் தொடர்பில் மேலும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment