இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அநுசரணையில் ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி நாளை (27) பண்டாரவளையில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.
தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் நடத்தாப்படும் மேற்படி சுற்றுப் போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அகில இலங்கை சிங்கர் ஸ்ரீ லங்கா பாடசாலைகள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருடத்திற்கான போட்டி நாளை (27) பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கும் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கையிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரே பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணி வீரர்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் அலியார் ஏ பைஸருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், விளையாட்டு அபிவிருத்திக்குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன நடைபெறவிருக்கும் போட்டியில் கடந்த வருடம் போல் வெற்றி பெற்று அகில இலங்கை சம்பியன்களாக வெற்றிபெற்று எமது மண்ணிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையைத் தேடித்தர வேண்டும் என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment