மாணவி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் : சந்­தேகநபர் கைது

ஆன­மடுவ பகு­தியில் 15 வயது மாண­வியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­திய அம் ­மா­ண­வியின் சிறிய தந்தை  கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஆன­ம­டுவ பகு­தியைச் சேர்ந்த 29 வய­து­டைய ஒருவரே இவ்­வாறு கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.
குறித்த மாணவி கடந்த திங்­கட்­கி­ழமை மாலை பிரத்­தி­யேக வகுப்­புக்கு சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த போது அவ­ளது சிறிய தந்­தையால் மஹாகும்­பு­க்க­ட­வல பகு­தியில் வைத்து இவ்­வாறு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களின் மூலம் தெரிய வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இச்­சம்­பவம் தொடர்பில் மாண­வியின் பெற்றோர் முந்தல் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை அடுத்தே சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிப்­புக்­குள்­ளான மாணவி வைத்­திய பரி­சோ­த­னைக்­காக சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment