அணியின் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமீன் ஹூசைன், உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதா பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன் ஹோட்டலில் அணியினருடன் தங்கியிருந்த அல்-அமீன் ஹூசைன் அனுமதியின்றி இரவு 10 மணிக்கு பின்னர் வெளியே சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஊழல் தடுப்பு பிரிவு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் அடிப்படையில் அவர் உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment