நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் அல்-அமீன் ஹூசைன்

அணியின் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமீன் ஹூசைன், உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதா பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிரிஸ்பேன் ஹோட்டலில் அணியினருடன் தங்கியிருந்த அல்-அமீன் ஹூசைன் அனுமதியின்றி இரவு 10 மணிக்கு பின்னர் வெளியே சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஊழல் தடுப்பு பிரிவு பங்களாதேஷ்  கிரிக்கெட்  சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் அடிப்படையில் அவர் உலகக் கிண்ண கிரிக்கெட்  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment