சுண்டைக்காய் கசப்பு சுவையுடையது. இதை பல்லாண்டு காலமாக தமிழர்கள் உணவிற்காக விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
கோழையகற்றியாகவும் நீரிழிவு , இருமல், வயிற்றுப்பூச்சிகொல்லியாகவும், மூலம் ஆகிலியவற்றை குணமாக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதன் இலை மாதவிடாய் தொல்லைகளுக்கும், தோல்நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது. காயை சமைத்து உண்டால் நுண் புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் போகும்.
சுண்டைவற்றலை பயன்படுத்தினால் சுவையின்மை, வயிற்றில் உள்ள புழு,நிணக்கழிச்சல், சீதக்கட்டு, மார்ச்சளி, செரியாக்கழிச்சல், மூலம் நீங்கும். பசியை அதிகரிக்கும். தொடர்ந்து சுண்டைக்காய் வற்றலை சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டால் ஏற்படும் ஏப்பம், வயிறு விழுதல், வயிற்றுவலி மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரை பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச் சுற்றல், வாந்தி, மயக்கம், நீங்கும். மார்ச்சளி, தொண்டைக்கட்டு, சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, வெந்தயம் முதலியவற்றை இளம் வறுப்பாக வறுத்து தேவையானளவு உப்பு கலந்து பொடித்து கொள்ளவேண்டும். இந்த பொடியை உணவில் கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை மலக்குடல் கிருமிகள் நீங்கும்.
ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். பால் சுண்டையாக சமைத்து உண்டு வந்தால் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர் பூச்சி முதலியன போகும். சுண்டை செடியின் வேர்ப்பட்டையை பொடிசெய்து தேங்காய் குடுவையில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிட்டு உள்ளே இழுக்க நீரேற்றம், மண்டைக்குடைச்சல், ஒற்றைத்தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும். சுண்டைவேர் ஒருகைப்பிடி எடுத்து அரைலீற்றர் தண்ணீரில் போட்டு 200மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி குடிக்க, வலியுடன் ஏற்பட்ட காய்ச்சல் தீரும். சுண்டைவேர், தும்பைவேர், இலுப்பைபிண்ணாக்கு சமஅளவு எடுத்து, இடித்து பொடிசெய்து முகர இழுப்பு நோய் தணிந்து குணம்ஏற்படும்.
சுண்டைவற்றல்,கறிவேம்பு, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் இவற்றை ஒரே அளவாக எடுத்து அதை தனித் தனியாக இளவறுப்பாக வறுத்து சூரணமாக செய்து கொள்ளவேண்டும். இதில் 3 சிட்டிகை அளவில் காலை மாலை மோரில் சாப்பிட மூலம், மார்ச்சளி நீங்கும். சுண்டைக்காய் வற்றலை சிற்றாமணக்கெண்ணெயில் வறுத்து, இதனுடன் மிளகு, சீரகம், கறிவேம்பு, வெந்தயம் இவைகளை வறுத்து பொடித்து கொண்டு சாப்பிட மந்தம், செரியாமை, கட்டுப்படும்
0 comments:
Post a Comment