போதையற்ற தேசத்தை உருவாக்குதல்; வீதி ஊர்வலமும்

போதையற்ற தேசத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி ஊர்வலமும், மக்களை விழிப்பூட்டும் துண்டுப் பிரசுர விநியோகமும் இடம்பெற்றது.

ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவினால் தேசிய போதை தடுப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.பாறூக், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்களை விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்களை வர்த்தக நிலையங்களுக்கும் வீடு வீடாகவும் உத்தியோகத்தர்களினால் விநியோகிக்கப்பட்டது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment