''ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு இருக்கவேண்டும். குமார் சங்கக்காரவும் நானும் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் இறந்துவிடும் என்று கூறமுடியாது. அது தொடரும் என்பது நிச்சயம். நாங்கள் இருவரும் இவ்வளவு நீண்டகாலம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்காக பங்களிப்பு வழங்கிய தையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்'' என இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடை யில் ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் இலங்கையில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும். எனவே இன்றைய இந்தப் பகலிரவுப் போட்டி முடிவில் சிரேஷ்ட வீரர் கள் இருவருக்கும் உணர்வுபூர்வ பிரியாவிடையை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போட்டிக்கு முன்பதாக பிரேமதாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள கேட் போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மஹேல கலந்துகொண்டு செய்தியாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
உங்களது இந்த பிரியாவிடைப் போட்டி உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமா? எனக் கேட்கப்பட்டபோது, ''அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி தான் என்னை அதிகளவில் உணர்ச்சிவசப்படச் செய்தது. ஒருவேளை போட்டியின் பின்னர் நான் உணர்ச்சிவசப்படக்கூடும். ஏனெனில் இரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடும்'' என பதிலளித்தார்.
ஆரம்பப் போட்டியும் பிரியாவிடைப் போட்டியும் ஒரே மைதானத்தில் இடம்பெறுவதை நினைவுபடுத்தியபோது, ''சர்வ தேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அதே மைதானத்தில் பிரியாவிடைபெறுவது என்பது அதிர்ஷ்டம். நான் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மனநிறைவு டனும் சந்தோஷத்துடனும் விளையாடி வந்தேன். இந்தளவு முன்னேற்றத்தை அடைவேன் என நான் எண்ணியதில்லை. அர்ப்பணிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் நினைவில் நிறுத்தியவாறு எனது திறமையை வெளிப்படுத்திவந்தேன்'' என் றார்.
இன்றைய போட்டியிலும் உலகக் கிண் ணப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுவீர்களா? என வினவியபோது, ''இங்கிலாந்துக்கு எதிரான ஓரிரு போட்டிகளில் என்னை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுமாறு கிரிக்கெட் அணி முகாமைத்துவம் கேட்டுக்கொண்டது. உலகக் கிண்ணப் போட்டிவரை இது தொடருமா என்று நான் கருதவில்லை. அதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். மேலும் எமது குழாமில் இன்னுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இருக்கின்றார். எனவே நாளைய (இன்று) போட்டிக்கு முன்னர் தெரிவாளர்களும் அணி முகாமைத்துவத்தினரும் உரிய வீரர்களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்பிட்டார்.
குமார் சங்கக்கார தனது சொந்த மைதா னத்தில் சதம் குவித்துவிட்டு விடைபெற்றது போல் நீங்களும் சதம் குவித்து விடைபெற முயற்சிப்பீர்களா என வினவப்பட்டபோது, ''அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம்'' என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள இலங்கை 4–2 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.
0 comments:
Post a Comment