பாகிஸ்தானின் லாகூர் நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பானது அந்நகரிலுள்ள பொலிஸ் தலைமையகங்களுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் இரண்டாவது மிகப் பெரிய நகரும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அதிகார தளமாகவும் லாகூர் நகர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு நகரான பெஷாவரில் பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 22 பேர் பலியான சம்பவத்துக்கு சில நாட்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் டொக்டர் உஸ்மான் என்ற போராளிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
பெஷாவரிலுள்ள பாடசாலையில் 150 க்கு மேற்பட்டவர்கள் தலியான் துப்பாக்கி தாரிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதில் நிலவிய ஸ்தம்பித நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
0 comments:
Post a Comment