ஆனால் ஆறு மாதங்களின் பின்னர் எவ்வாறான அறிக்கையை மனித உரிமைப் பேரவை வெளியிடும் என்பது குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது உண்மையில் நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம்.
ஆனால் ஒரு விடயம் குறித்து நாடு அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். அதாவது ஆறு மாதங்களின் பின்னர் இந்த அறிக்கை வெளிவரலாம். அப்போது எவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை வரும் என்று பார்க்கவேண்டும்.
புதிய அரசாங்கம் உள்ளக விசாரணையை முன்னெடுக்கப்போவதாக கூறியுள்ளது. எமது முன்னைய அரசாங்கமும் உள்ளக விசாரணையை முன்னெடுத்தது. காணா மல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வ தற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது என்றார்.
0 comments:
Post a Comment