ஏன் அவங்க வரக் கூடாது? என்னோட நடிக்க தினசரி படப்பிடிப்புக்கு வர்றவங்க, என்னோட பார்ட்டிக்கு வந்ததில் என்ன பரபரப்பு? நயன் மட்டுமில்ல, நிறைய பேர் அந்த பார்ட்டிக்கு வந்தாங்க. தனுஷ், நயன்தாரான்னு எல்லாரோடவும் நெருக்கமாத்தான் பழகுறேன்.
ஹன்சிகா, நயன்தாரா இருவருடனும் காதல் பிரிவிற்கு பிறகு நடித்திருக்கிறீர்கள். காதலிக்கும்போது இருந்த மனநிலை என்ன? நடிக்கும் போது இருந்த மனநிலை என்ன?
நீங்கள் காதலிக்கும்போது பண்ணிய வேடிக்கையான விஷயம் என்ன?
நான் காதல் பண்றதே க்ரேஸியான விஷயம்தான். என்னை மாதிரி ஒருத்தன் காதலிக்கவே முடியாது. மூன்று காதலைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
2015 இல் திருமணத் திட்டம் உள்ளதா?
எதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்? நான் கல்யாணத்திற்கு எதிரானவன் இல்லை. கல்யாணம்கிறது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்ணிக்கொள்வது. கல்யாணம் நடக்கிற அளவுக்கு இப்போ விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு. கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம் புரிதல் உண்டாகி, அதுக்கப்புறம்தான் கல்யாணம் சரியா அமையுது. ஒவ்வொரு பத்து வருடத்துக்கும் நம்முடைய கலாசாரமும், சமூகமும் மாறிக்கிட்டேதான் இருக்கு. அதுக்கு ஏற்பத்தான் நாம வாழணும். அதை விட்டுட்டு, பின்னோக்கிப்போய் நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்ல முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திக்கிறவன்தான் இந்த சிம்பு. ஏதோ ஒரு பெண் பார்த்து, பேசி முடிச்சு, தாலி கட்டி வாழ்ந்துட முடியாது. 'இவகிட்ட சாகுற வரைக்கும் தோற்கலாம்'கிற அளவுக்கு மனசைப் பொளக்குற பொண்ணு கிடைக்கட்டும்.
உங்கள் படங்கள் வெளியாக மூன்று வருட இடைவெளி விழுந்துடுச்சே?
இனிமேல் இந்தப் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் ‘இது நம்ம ஆளு' படத்தை நானே தயாரிக்கிறேன். அதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் எல்லாமே தேர்ந்தெடுத்து சரியாத்தான் பண்ணுவேன். கெளதம் மேனன் படத்தை முடிச்சிட்டு, செல்வராகவன் இயக்கும் படத்துக்கு 'டேட்' கொடுத்திருக்கேன்.
0 comments:
Post a Comment