ஜனாதிபதி மைத்திரி இன்று திருகோணமலைக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் சம்பந்தமாக அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.
கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸிர் அகமட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment