ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு எதிராக இன்று சாய்ந்தமருது பிரேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன் அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிற்கு, முதலைமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று நண்பகல் ஜும்ஆத் தொழுகையினை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment