ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்

ஈராக்­கிய திக்றித் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று அந்த தீவி­ர­வாத குழு­வி­னரால் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­மைக்­கா­கவே மேற்­படி நால்­வ­ருக்கும் தீவி­ர­வா­தி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.திக்றித் நகரைக் கைப்­பற்ற அந்­நாட்டு அர­சாங்கம் 30,000 படை­யி­னரை உள்­ள­டக்கி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­ பித்த தினத்­தி­லேயே இந்த வீடியோ காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேற்­படி கொல்­லப்­பட்ட நால்வரும் திக்றித் பிராந்­தி­யத்­திற்கு வடக்­கே­யுள்ள நக­ரொன்றைச் சேர்ந்­த­வர்கள் என அந்த வீடியோ காட்­சியில் விப­ரிக்­கப்­பட்­டுள்­ளது.அந்த வீடியோ காட்­சியில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்கு முன்னர் 'சஷ்வத் அல்-­-அலாம் அமைப்­பி­லி­ருந்து நீக்கம்' என்ற பதா­கை­யொன்று காண்­பிக்­கப்­பட்­டது.தொட­ர்ந்து முக­மூ­டி­ய­ணிந்த தீவி­ர­வா­தி­களால் அந்த நால்­வரும் தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­லப்­ப­டு­கின்­றனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment