அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், நேற்று நடந்த உலக்கிண்ணத்திற்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இறுதிவரை போராடிய சிம்பாப்வே அணியின் போராட்டம்மிக்க அந்த ஆட்டம் வரவேற்கத்தக்கதாக விளங்கியது.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய நசிர் அகமது 1 ஓட்டத்துடனும்இ அகமது ஷேசாத் ஓட்டமேதும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்து மோசமானதொரு ஆரம்பத்தைக் கொடுத்தனர். பின் இணைந்த ஹாரிஸ் சோகைல்இ மிஸ்பா ஜோடி நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ஓட்டங்களைச் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பொறுப்பாக ஆடிய மிஸ்பா 73 ஓட்டங்களைப் பெற்றார். உமர் அக்மல் 33 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் தந்தார். அடுத்து வந்த அப்ரிடி ஓட்டமேதும் பெறாத நிலையில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். வகாப் ரியாஸ் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளுக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது. சிம்பாப்வே சார்பில் சட்டாரா 3, சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
236 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி இறுதிவரைப் போராடியும் பலனளிக்காத நிலையில் 20 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
சிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பன்யங்கார 9 ஓட்டங்களுடனும், சிக்கண்டர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்ற, அடுத்து களம் புகுந்த டெய்லர் 50 ஓட்டங்களை விளாசினார்.
வில்லியம்ஸ் 33 ஓட்டங்களையும், சிக்கும்புரா 35 ஓட்டங்களையும், மசகட்ஸா 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் இர்பான் மற்றும் ரியாஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment