இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியில் தான் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நேற்று வியாழக்கிழமை இராஜினாமா செய்த சோமவன்ச அமரசிங்க, புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
இந்நிலையில், கட்சி தொடர்பில் கிளம்பியுள்ள வதந்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment