-மஹி-
சர்வதேச புகைத்தல் தினம் மே 31 தொடக்கம் ஜூன் 10 வரை தேசிய ரீதியில் 'என்றும் போதையற்ற ஒழுக்கம் நாட்டுக்குத் தேவை' எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சாய்ந்தமருது திவிநெகும பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடி தின நிகழ்வு பிரதேச செயலகத்தில் (01) திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் திவிநெகும உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எம். ஹூதா பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு கொடி அணிவிப்பதையும், அருகில் பிரதேச செயலக கணக்காளர் திருமதி. எம்.எம். ஹூஸைனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. மஜீட், திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவு உத்தயோகத்தர் எம்.எம். சஹாப்தீன் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment