ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இன்று உணவுப் பொதி வழங்குவதனூடாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானித்துள்ளனர். இது நல்லாட்சியின் விளைவாகும். நாட்டில் நல்லாட்சி சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. யுத்த களத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை யுத்தக் குற்றமாக பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்தால் யுத்தம் செய்ய முடியாது. ஆனால் ரக்பி வீரர் தாஜுதீனின் கடத்தல் மற்றும் கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment