ஹொரணை பிரதேசத்தில் உள்ள இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹொரணை தக்ஷிலா மகா வித்தியாலயம் மற்றும் ஸ்ரீபாலி வித்தியாலய மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இன்று திங்கட்கிழமை(23) பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலில் காயமடைந்த 7 மாணவர்கள், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்களுக்கிடையிலான குழு மோதலை தடுக்க சென்ற ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.tamilmirror.lk/140379#sthash.QeZSxBLI.dpuf
0 comments:
Post a Comment