இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை இன்று (17) பின்னவலயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத் திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் நிர்மாணத்திற்கு 862 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு, அதற்கான 488 மில்லியன் ரூபா திரைச்சேரியினால வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment