மதுபோதையில் கடமைக்கு வந்த மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம்


மதுபோதையில் கடமைக்கு வந்த மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம்குடித்து விட்டு போதையில் கடமையில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் சாஜன்ட் ஒருவரும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபில்களுமே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

நேற்று அதிகாலை இவர்கள் இவ்வாறு மதுபோதையில் கடமைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. 

குறித்த மூவரும் பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment